Mr. Sellaiah Nadarasa

Sellaiah Nadarasa

Deceased: 21 November 2025

யாழ். மாதகல் காஞ்சிபுரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செல்லையா நடராசா அவர்கள் 21-11-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா - தங்கரத்தினம் தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற வேலுப்பிள்ளை - தங்கம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற புஸ்பராணி அவர்களின் அன்புக் கணவரும், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை, கந்தசாமி, தம்பையா ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

சுவேந்திராதேவி (இலண்டன்), வசந்தகுமாரி (ஆசிரியை - யாழ். மாதகல் விக்கினேஸ்வரா வித்தியாலயம்), தவக்குமார் (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

அசோக்குமார் (இலண்டன்), ஜெனார்தன் (தாதிய விடுதி சகோதரர் ஆதார வைத்தியசாலை தெல்லிப்பளை), ஜெனுபா (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

மாசிலன் (பொறியியலாளர்), மானுசிகா (இறுதி ஆண்டு மருத்துவபீட மாணவி), நவீன் (4ம் ஆண்டு மருத்துவ பீட மாணவன்), புவிஷிகா, தரணிகா, அஸ்விகா, ஆர்த்திகன், ஜஷ்னவி, சயனவி, மிதுஷ்னவி, தக்க்ஷ்னவி ஆகியோரின் பேரனும் ஆவார். 

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை 23-11-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் மாதகல் போதி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (23/11/2025 00:00)