திரு. செல்லையா அழகரெத்தினம்
(ஓய்வுபெற்ற பீடாதிபதி - வவுனியா கல்வியியல் கல்லூரி)
தோற்றம்: 12 ஜூன் 1941 - மறைவு: 04 ஜூலை 2026
மட்டக்களப்பு - வீரமுனையைப் பிறப்பிடமாகவும், இல- 29/1, மத்திய வீதி, உவர்மலை, திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. செல்லையா அழகரெத்தினம் அவர்கள் 04-07-2026 சனிக்கிழமையன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லையா - வள்ளிப்பிள்ளை தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வனும், காலஞ்சென்ற புண்ணியமூர்த்தி - பகவதிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும்,
சிவகாமிப்பிள்ளை (ஓய்வுபெற்ற ஆசிரியை - புனித மரியாள் கல்லூரி, திருகோணமலை) அவர்களின் அன்பு மனைவியும்,
மோகன் (இலண்டன்), ராஜினி (இந்தியா), லோஜினி (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தகப்பனாரும்,
வாசுகி (இலண்டன்), கோடிஸ்வரன் (இந்தியா), சசிகரன் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம், நடேசன், ராஜேஸ்வரி மற்றும் யோகம் (சரஸ்வதி), முத்துராஜா ஆகியோரின் அன்புச் சசோதரரும்,
குகேஷயந் - ஆர்த்தி (கனடா), ஹரிஷோத் (கனடா), செந்தூரன் (இலண்டன்), சாயினி (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புப் பாட்டனாரும்,
கைரா வின் (கனடா) அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 07-07-2026 செவ்வாய்க்கிழமை அன்று மாலை 4.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் திருகோணமலை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
