Dr Sellappa Sellathurai
Date of Birth: 05 April 1935 - Deceased: 05 February 2024
மட்டுவிலைப் பிறப்பிடமாகவும், ஊரெழு, வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செல்லப்பா செல்லத்துரை அவர்கள் 05-02-2024 திங்கட்கிழமை அன்று முருகன் திருவடி அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லப்பா - தங்கமுத்து தம்பதியினரின் கனிஷ்ட புதல்வனும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா - தங்கம்மா தம்பதியினரின் மருமகனும்,
காலஞ்சென்ற நாகம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
சாந்தினி, சுஜாதா, சுரேந்திரன், அஜித்தா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ராஜநாதன், சுரேஸ்குமார், கிருத்திகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ராகுல் (அவுஸ்திரேலியா), அஸ்வின் (ஐக்கிய இராச்சியம்), லக்ஷன் (ஐக்கிய இராச்சியம்), தனந்திகா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,
காலஞ்சென்றவர்களான இராமலிங்கம், இராசம்மா, கந்தையா, பொன்னையா, நாகம்மா ஆகியோரின் அன்பு தம்பியும்,
காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம், சிவபாதசுந்தரம் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 4B, மன்னார் வீதி, குருமன்காடு, வவுனியாவில் அமைந்துள்ள அவரின் இல்லத்தில் 08-02-2024 வியாழக்கிழமை காலை 10.00 மணியளவில் ஈமைக்கிரியைகள் நடைபெற்று, தகனக்கிரியைகளுக்காக எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
www.tamilthakaval.org
