யாழ். பத்தமேனி அச்சுவேலியை பிறப்பிடமாகவும், ஆவரங்கால் வன்னியசிங்கம் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செல்லப்பா தவயோகநாதன் அவர்கள் 25-05-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி. செல்லப்பா தம்பதியினரின் அன்பு மகனும்
திரு. திருமதி. நவரத்தினம் - பாலஞானமணி தம்பதியினரின் மூத்த மருமகனும்.
காலஞ்சென்றவர்களான தவமணிதேவி - நகுலேஸ்வரி ஆகியோரின் அன்புக்கணவரும்,
காலஞ்சென்ற அன்னலஷ்மி, நமசிவாயம், சரஸ்வதி ஆகியோரின் அன்புச்சகோதரரும்,
நந்தன் (தயா-சிவசங்கரி அகம்), கவிதா (ஜேர்மனி), சத்தியசீலன் (கண்ணன்-கனடா), சிவசீலன் (தம்பி), வவா (ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தவராணி, காலஞ்சென்ற றொபின்ஷன் (கண்ணன்), சிவநிதி, உமா, தர்மசீலன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
நாகேஸ்வரி (கனடா), சகுந்தலேஸ்வரி, பாலச்சந்திரன் (லண்டன்), ரவிச்சந்திரன் (பிரான்ஸ்), செல்வச்சந்திரன் (கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
திவ்வியன், ஆர்சா, ஆர்சன், அக்சா, பானுசா, கபிசன், பாசறைவாணன், சாலுதன், ஷாருஜன், மேகனா, ரவீனா, ஆடேஸ் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதி வணக்க நிகழ்வுகள் 28-05-2024 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று, கரதடி இந்து மயானத்தில் புகழுடல் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org

