திரு. செல்லத்துரை சந்திரசேகரம்
தோற்றம்: 07 நவம்பர் 1943 - மறைவு: 24 பெப்ரவரி 2025
யாழ். நீலியம்பனை மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், நீதிமன்ற வீதி, மல்லாகத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செல்லத்துரை சந்திரசேகரம் அவர்கள் 24-02-2025 திங்கட்கிழமை அன்று இறையடி அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை - நல்லம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான இரத்தினம் - மகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற இரஞ்சிதமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
சசிகரன், கிருபாகரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுதர்சினி, காயத்திரி ஆகியோரின் மாமனாரும்,
மதுரஜன், மிதுன்யா, அம்ஷனா, நட்சத்திரா, அஸ்மி, சஷ்விகன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
பத்மநாதன், கமலாதேவி, காலஞ்சென்ற இந்திரசேகரம், மற்றும் சரோஜினிதேவி, ரவீந்திரன், குணசேகரம், காலஞ்சென்ற ஜெயக்குமார் ஆகியோரின் பாசமிகு சகோதரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 27-02-2025 வியாழக்கிழமை அன்று காலை 9.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் மல்லாகம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
