திரு. செல்லத்துரை இராசரத்தினம் (பழனி)
(Star Body Builders நிறுவன உரிமையாளர்)
தோற்றம்: 01 ஜூலை 1952 - மறைவு: 26 டிசம்பர் 2025
யாழ். ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், ஓட்டுமடம் மற்றும் தாண்டிக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. செல்லத்துரை இராசரத்தினம் அவர்கள் 26-12-2025 வௌ்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை - தங்கம் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராசு - இராசம் தம்பதியினரின் மருமகனும்,
தேவரஞ்சினி அவர்களின் அன்புக் கணவரும்,
சர்மிளா (அபிவிருத்தி உத்தியோகத்தர் - வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை), பிரேமிளா (அபிவிருத்தி உத்தியோகத்தர் - வவுனியா மாவட்ட சமூக சேவைகள் அலுவலகம்), தர்ஜினி (அலுவலக உதவியாளர் - வவுனியா வடக்கு கல்வி வலயம்), சாள்ஸ்ராஜ் (மின்னியலாளர்) ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,
மனோன்மணி (கண்ணா எள்ளுபாகு உரிமையாளர் - ஆனைக்கோட்டை), காலஞ்சென்ற சிங்கராசா ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
சிவனேஸ்வரன் (சாரதி), செல்வகுமார் (ஆசிரியர் - முல். கரிப்பட்ட முறிப்பு அ.த.க.பாடசாலை), உதயகுமார் (சாரதி), மிலக்சிகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ரிஷிக்கா, பரணிதா (வவு. இறம்பைகுளம் மகளிர் கல்லூரி) ஆகியோரின் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 29-12-2025 திங்கட்கிழமை அன்று முற்பகல் 11.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் பத்தினியார் மகிழங்குளம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
