Mr Sellathurai Sivapatham

Sellathurai Sivapatham

Date of Birth: 31 May 1946 - Deceased: 08 September 2025

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், சுழிபுரம் கிழக்கு, மலேசியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திரு. செல்லத்துரை சிவபாதம் அவர்கள் 08-09-2025 திங்கட்கிழமை அன்று மலேசியாவில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை (தண்ணிச்சாமி) - வள்ளியம்மை தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான முருகேசு - சரஸ்வதி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

பரமேஸ்வரி (ராணி) அவர்களின் அன்புக் கணவரும்,

சசிகலா, காலஞ்சென்ற கணேஷ் (கரன்), ஜெகதீஸ்வரி (ஜெயா), அருள்செல்வன் (அருள்), வாசுகி ஆகியோரின் பாசமிகு அப்பாவும்,

கனகலிங்கம், காலஞ்சென்றவர்களான சிவப்பிரகாசம், விமலாதேவி மற்றும் சுசிலாதேவி, விசாகப்பிரபு (பிரபு), பரணிதரன் (குணம்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கருணாவதி, புஸ்பராணி, காலஞ்சென்றவர்களான சிவலிங்கம், நவரத்தினம் மற்றும் சியாமளா, கிருபா, காலஞ்சென்ற செல்லம்மா, பாக்கியலட்சுமி, ராஜேஸ்வரி (ராசாத்தி), தவராசவேல் (அரோகரா) காலஞ்சென்ற தங்கேஸ்வரி மற்றும் சற்குணவேல் (குணம்) நாகேஸ்வரி (குஞ்சு), சிவனேஸ்வரி ஆகியோரின் மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான சிவராசா, கோவேந்திரநாதன் மற்றும் யோகராணி, அமுதலிங்கம், இரத்தினமலர், காலஞ்சென்ற செல்வராசா ஆகியோரின் சகலனும்,

சிவகுமார், வீரகுமார், லவகோபன், கிருஷாந்தி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மலர்விழி, காவேரி, கல்யாணி, கஸ்தூரி, மதுஷா, அபிஷா, டினுஷா, வீரவேல், தணிகா, தக்சிகா, புவிஸ், ஆர்த்திகா ஆகியோரின் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் மலேசியாவில் சுங்கப்பட்டாணியில் உள்ள அவரது இல்லத்தில் 10-09-2025 புதன்கிழமை முற்பகல் 10:00 மணியளவில் நடைபெற்று, நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (11/09/2025 01:11)