திரு. செல்வநாயகம் பாலச்சந்திரன்
(ஓய்வு பெற்ற மருத்துவ தாதி- இராணுவ வைத்தியசாலை- இலங்கை, றோயல் பலஸ் வைத்தியசாலை- ஓமான்)
தோற்றம்: 05 டிசம்பர் 1946 - மறைவு: 15 ஏப்ரல் 2023
கொழும்பைப் பிறப்பிடமாகவும், வெள்ளவத்தை இராஜசிங்க வீதியை வதிவிடமாகவும் கொண்ட செல்வநாயகம் பாலச்சந்திரன் அவர்கள் 15-04-2023 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற செல்வநாயகம், திருப்பதி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற சிவப்பிரகாசம், ருக்குமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பானுமதி(ஓய்வு பெற்ற பிரதம மருந்தாளர்- தேசிய வைத்தியசாலை, இலங்கை) அவர்களின் அன்புக் கணவரும்,
சர்மிளா (லண்டன்), சஞ்சிவ் (லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மனோரதன், ஹர்ஷினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கிருஷ்னி, அரிஸ், அகரன், அசான் ஆகியோரின் பாசமிகு பாட்டனாரும்,
பாலஜோதி, சுகிர்தராணி, திருச்செல்வம் (லண்டன்), அன்பானந்தன், பேரின்பநாயகம் (கனடா), சதானந்தன் (லண்டன்), சிவானந்தன் (கனடா), கலைவாணி (கனடா), சிவகுமாரன் (அமெரிக்கா), மஞ்சுளா (அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு மூத்த சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான கனகலிங்கம், சந்திரமோகன் மற்றும் மேர்லின் (லண்டன்), சரோஜா (கனடா), புஸ்பலதா (லண்டன்), ஷாமினி (கனடா), Dr. ரஞ்சன் (கனடா), வாசுகி (ஐக்கிய அமெரிக்கா) மற்றும் சிவானந்தமணி (லண்டன்), சிவசண்முகானந்தன் (நியூசிலாந்து), சிவசோதி, ரவீந்திரன் (கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
