திருமதி. செல்வராணி ஜெகநாதன்

செல்வராணி ஜெகநாதன்

தோற்றம்: 21 ஆகஸ்ட் 1948 - மறைவு: 14 நவம்பர் 2022

யாழ். கன்னாதிட்டி வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்வராணி ஜெகநாதன் அவர்கள் 14-11-2022 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கார்த்திகேசு, மாணிக்கம் தம்பதிகளின் இளையப் புதல்வியும்,

காலஞ்சென்ற சிவகுரு, தங்கச்சியம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற ஜெகநாதன் அவர்களின் பாசமிகு துணைவியும்,

காலஞ்சென்றவர்களான துரைராஜா, இராசம்மா மற்றும் பவளம், தங்கமணி, நடராஜா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

செல்வமலர், சூரியகலா தவமணி, குருசாமி, இராஜரட்ணம், தம்பிஐயா, புஸ்பராணி, இராஜினி ஆகியோரின் மைத்துனியும்,

தலையசிங்கம், பேரின்பரட்ணம், வினோதினி ஆகியோரின் சகலியும்,

ஜனார்த்தனன்(அபிவிருத்தி உத்தியோகத்தர் பிராந்திய கால்நடை சுகாதாரப் பணிமனை, முல்லைத்தீவு), காலஞ்சென்ற காண்டீபன்(அபி விருத்தி உத்தியோகத்தர் பிரதேச செயலகம், வாகரை), ரகுராம்(Auditor, லண்டன்), அகிலவாசன் (R&D Scientist, ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சுமித்திரா(முகாமையாளர், பனை அபிவிருத்திச் சபை), சுதர்சினி(அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரதேச செயலகம், ஆரையம்பதி), தர்சிகா(லண்டன்), சகிலா (Material Science Engineer, ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அனந்தவைகரி(மாணவி-யா/வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை), அரிஷ்ணவன்(மாணவன்-யா/இந்துக் கல்லூரி), அப்ரமேதன், அக்‌ஷதா, அனீஷா, அபிஷாலி, அனேதன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 17-11-2022 வியாழக்கிழமை அன்று மு.ப. 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
வீட்டு முகவரி:-
 
இல.123/1,
கன்னாதிட்டி வீதி,
யாழ்ப்பாணம்.
 
தகவல்:- குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/11/2022 16:41)