Mr. Selvarathinam Vinothrasa
Date of Birth: 15 May 1976 - Deceased: 13 January 2026
யாழ். காரைநகர் மருதடியைப் பிறப்பிடமாகவும், விளையாட்டரங்க வீதி கோப்பாயை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செல்வரத்தினம் வினோதராசா அவர்கள் 13-01-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், செல்வரத்தினம் - உஷாதேவி தம்பதியினரின் அன்பு மகனும்,
யசோதா, சிவசங்கரி, சிவாஜினி, சிவகணேசன், சிவகஜன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
சஞ்சீவன், சேந்தன், சலஜன், சரணியா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அகன்யா, பிரணிகா ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 16-01-2026 வௌ்ளிக்கிழமை அன்று காலை 8.00 மணியளவில் கோப்பாயிலுள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, முற்பகல் 10.00 மணியளவில் திருவுடல் செம்மணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
