Mrs. Senathirajah Pooranam
Deceased: 15 October 2024
யாழ். நீர்வேலி தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சேனாதிராசா பூரணம் அவர்கள் 15-10-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சின்னத்துரை-தங்கம் தம்பதியினரின் அருமை மகளும்,
சின்னத்தம்பி-கனகம்மா தம்பதியினரின் மருமகளும்,
காலஞ்சென்ற சேனாதிராசா அவர்களின் அன்பு மனைவியும்,
யசோதா, வனிதா, பகீரதன், புலந்திரன் (இந்திரன்), கேதீஸ்வரன் ஆகியோரின் அன்புத்தாயாரும்,
காலஞ்சென்றவர்களான பொன்னம்மா, சின்னம்மா, இரத்தினம், அன்னலட்சுமி, தருமலிங்கம், பஞ்சலிங்கம், கனகலிங்கம் மற்றும் மீனாட்சி, சோதிலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 16-10-2024 புதன்கிழமை அன்று முற்பகல் 11.45 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் சீயாக்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
