செல்வி. செந்தில்வேல் ஜெயறஞ்சினி
தோற்றம்: 27 நவம்பர் 1955 - மறைவு: 01 ஆகஸ்ட் 2023
ஓய்வுபெற்ற யூனியன் கல்லூரி பிரதி அதிபரும், பொருளியல் ஆசிரியையுமான செல்வி செந்தில்வேல் ஜெயறஞ்சினி (ஜெயா)அவர்கள் இன்று செவ்வாய்கிழமை (01.08.2023) தனது 68 ஆவது வயதில் இறைபதம் அடைந்தார்.
யாழ் அளவெட்டியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அன்னார், காலஞ்சென்ற செந்தில்வேல் - நீலாம்பாள் தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற கேசவமூர்த்தி மற்றும் ஜெயரூபி, இதயமூர்த்தி (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காந்தமணி (நல்லூர்), சிவகாமி (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஜெனகன், தணிகன்,மேனகன், நிலாங்கி, ஆரோகனா, வாசகி, வர்மன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
புவனதர்சினி, பாத்திமா மரீன ஆகியோரின் சிறிய தாயும்,
லாய்க்கா, லுக்மன், பபிஷாலி ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 03. 08. 2023 வியாழக்கிழமை காலை 7 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் அளவெட்டி வடக்கு கேணிப்பிட்டி இந்து மயாணத்தில் தகனம் செய்யப்படும்.
அன்னாரை இழந்து தவிக்கும் குடும்பத்தினர், உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் யூனியன் கல்லூரிச் சமூகம் சார்பாகவும், எமது குடும்பம் சார்பாகவும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
தயவுசெய்து இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
“நீலகிரி” இல்லம்,
அளவெட்டி.
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (02/08/2023 02:14)
