திருமதி. சண்முகம் சிவானந்தவல்லி
தோற்றம்: 05 மார்ச் 1941 - மறைவு: 27 டிசம்பர் 2025
யாழ். பத்தமேனி, அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Bobigny யை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. சண்முகம் சிவானந்தவல்லி அவர்கள் 27-12-2025 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற துரையப்பா, இரத்தினம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற ஆறுமுகம், ஆசைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சண்முகம் அவர்களின் அன்பு மனைவியும்,
தவகுமார் (சுவிஸ்), தியாகேஸ்வரி (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பாலபாஸ்கரன், மைதிலி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சகான், சகானா, டிலானி, நிலானி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான உமாபதிசிவம், மார்க்கண்டேயவாசகர் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பத்மாதேவி, சாந்தநாயகி ஆகியோரின் அன்பு மச்சாளும்,
காலஞ்சென்றவர்களான சிவபாதம், சர்வானந்தம், புனிதவதி மற்றும் பூமணி, தியாகராசா ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Saturday, 03 Jan 2026 [3:00 PM - 4:00 PM]
Sunday, 04 Jan 2026 [3:00 PM - 4:00 PM]
கிரியை:-
Wednesday, 07 Jan 2026 [9:00 AM - 11:15 AM]
தகனம்:-
Wednesday, 07 Jan 2026 [11:45 AM - 12:45 PM]
@
Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தகவல்:- தியாகேஸ்வரி (மகள்)
www.tamilthakaval.org
