திரு சண்முகம் ஸ்ரீதரன் (ஸ்ரீ)
தோற்றம்: 25 மே 1957 - மறைவு: 23 மார்ச் 2020
யாழ். சுன்னாகம் சந்தைவளவைப் பிறப்பிடமாகவும், சங்கானை தொட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகம் ஸ்ரீதரன் அவர்கள் 23-03-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சுன்னாகத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சண்முகம் புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,
தொட்டிலடியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான கனகரத்தினம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புஸ்பவதி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
ஸ்ரீரதி, ஸ்ரீரஜனி, ஸ்ரீகுமுதினி, ஸ்ரீவதினி, சத்யஸ்ரீ, ஸ்ரீபாலதாஸ் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற செல்வநாயகம், லோகநாதன், கணேசமூர்த்தி, இராஜமனோ, சந்திரகாந்தன், ஜஸ்மீன், ஞானாம்பிகை, புஸ்பவல்லி, காலஞ்சென்ற சற்குணநாதன், ஆஸ்வதிதேவி, ஞானேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-03-2020 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் விளாவெளி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
