திருமதி. சண்முகம் நாகம்மா

சண்முகம் நாகம்மா

தோற்றம்: 01 ஜனவரி 1935 - மறைவு: 08 ஜூன் 2025

யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், இருபாலையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சண்முகம் நாகம்மா அவர்கள் 08-06-2025 இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு - பார்வதிப்பிள்ளை தம்பதியினரின் பாசமிகு மகளும்,

காலஞ்சென்றவர்களான தனுகோடி - தெய்வானைப்பிள்ளை தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற சண்முகம் அவர்களின் அன்பு மனைவியும்,

லோகநாதன், தியாகராசா, விமலாதேவி, இந்திராதேவி, காலஞ்சென்ற லோகேஸ்வரன் () ஆகியோரின் அன்புத் தாயாரும்,

முத்துப்பிள்ளை, காலஞ்சென்றவர்களான பத்தினிப்பிள்ளை, கனகம்மா, தங்கம்மா, தையல்முத்து, சிவகாமிப்பிள்ளை, தம்பிராசா, லீலாவதி ஆகியோரின் சகோதரியும்,

சின்னம்மா, நாகம்மா, காலஞ்சென்றவர்களான வைத்தியநாதர், இளையதம்பி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பாசமலர், நிர்மலாராணி, புவனேஸ்குமார், குகதாசன், காலஞ்சென்ற கமலநாயகி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

தகிர்சன், லிதர்சன், பிரணவி, நிதர்சன், தர்சன், லக்சன்யா, அபிராம், அருண் ஆகியேராின் அன்புப் பேத்தியும்,

கிசானின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 12-06-2025 வியாழக்கிழமை அன்று முற்பகல் 10.30 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் இருபாலை நொச்சிக்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

முகவரி:-

செந்தவளவு இருபாலை கிழக்கு,

இருபாலை.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

 தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (11/06/2025 04:00)