திருமதி. சாந்தி செல்வராஜா
தோற்றம்: 29 மார்ச் 1943 - மறைவு: 25 டிசம்பர் 2023
யாழ். மானிப்பாயை பூர்வீகமாகவும், கொழும்பு பம்பலப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சாந்தி செல்வராஜா அவர்கள் 25-12-2023 திங்கட்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா-பத்மாவதி அவர்களின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான நடராஜபிள்ளை-ரத்தினம்மா அவர்களின் அன்பு மருமகளும்,
திரு. நடராஜபிள்ளை செல்வராஜாவின் அன்பு மனைவியும்,
திரு. குகேந்திரன் நடராஜா அவர்களின் அன்பு சகோதரியும்,
கௌரி, அர்ஜீனா ஆகியோரின் அன்பு தாயாரும்,
சந்திரசேகரன், நிக்கி ஆகியோரின் மாமியாரும்,
அபிராமி, அர்ச்சனா, ஆரியா, சாய்ரா ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் 27-12-2023 புதன்கிழமை காலை 8.00 மணி முதல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, மதியம் 11.30 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 2.00 மணிக்கு கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
