திரு சிங்காரவேலு சிதம்பரநடராஜா (தங்கவேல்)
(இளைப்பாறிய உணவுத்திணைக்கள ஊழியர், இலங்கை சமாதான நீதவான்)
தோற்றம்: 09 அக்டோபர் 1943 - மறைவு: 29 பெப்ரவரி 2024
யாழ். கரணவாய் வடக்கு நவிண்டிலைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிங்காரவேலு சிதம்பரநடராஜா அவர்கள் 29-02-2024 வியாழக்கிழமை அன்று கொழும்பில் இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிங்காரவேலு - தங்கமுத்து தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான தவச்செல்வம்-தங்கமுத்து தம்பதியினரின் அன்பு மருமகனும்,
அருட்செல்வி (சந்திரா) அவர்களின் அன்புக்கணவரும்,
ரதினி, பிரணவன், மாலினி ஆகியோரின் பாசமிகு தந்தையாரும்,
காலஞ்சென்றவர்களான புவனேஸ்வரி அம்மாள், தில்லை நடேசன், அருணா சலமூர்த்தி, தவமணிதேவி மற்றும் நித்தியானந்த செல்வி, சிறிநரசிங்கமூர்த்தி, சிறபாஸ்கரமூர்த்தி, சிறிமார்க்கண்டேயர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற தம்பிஐயா மற்றும் அருந்தவராஜா சரஸ்வதியம்மா, திருபாக்கியம் சரோஜினி, நிர்மலா, வசந்தி, காலஞ்சென்ற சண்முகலிங்கம், சிவசுப்பிரமணியம், அருமைத்துரை, அற்புதராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பேனாட், சுரேஸினி, பாலநாராயநேசன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
யாழினி, ஷாம்கதிர், நிலௌசி, மதுஷன், மதுவீணா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 03-03-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் காலை 9.00 மணி முதல் மாலை 6.30 மணி வரை அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 04-03-2024 திங்கட்கிழமை காலை 10.00 மணியளவில் ஈமைக்கிரியைகள் நடைபெற்று மதியம் 1.00 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் தகனக்கிரியைகள் நடைபெறும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
www.tamilthakaval.org
