Mr. Sinnaiah Kandiah
(ஓய்வுபெற்ற புகையிரத உத்தியோகத்தர்)
Date of Birth: 26 October 1928 - Deceased: 13 November 2024
யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், சண்டிலிப்பாயை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னையா கந்தையா அவர்கள் 13-11-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா-வள்ளல் தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான செல்லத்துரை-சிவக்கொழுந்து தம்பதியினரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற இராசமணி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற பாக்கியம், சதாசிவம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பாஸ்கரன், கருணாகரன், மனோகரன், கமலாகரன், ஜெயந்திமாலா, வசீகரன், ஜெயசுதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மகிழ்ராணி, உத்தமி, சுலோசனா, தயாபதி, ஜெயக்குமார், கோமலேஸ்வரி, வரதராஜன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தனுஷா, தர்ஷன், வினோத், விதுஷன். நிலோஜன், ஷோபிகா. வைஷ்ணவி, ஷர்மினி, சதுசன், யதுஷன், கிருஷிகா, ஹரினேஷ், அபிஷா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 17-11-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 11:00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, நண்பகல் 12:00 மணியளவில் கொட்டுப்பனை இந்து மயானத்தில் புகழுடல் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்.
முகவரி:-
மாசியப்பிட்டி,
சண்டிலிப்பாய் வடக்கு, சண்டிலிப்பாய்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
