Mr. Sinnaiya Diukpalkunan Lala (Lala Master)
(Retired Mathematics Teacher)
Date of Birth: 01 January 1951 - Deceased: 06 July 2024
யாழ். உடுவில் ஞானியர் வளவைப் பிறப்பிடமாகவும், முகாந்திரம் ஒழுங்கை மல்லாகத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னையா டியூக்பல் குணன் லாலா அவர்கள் 06-07-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா-பூரணம் தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற கந்தசாமி-நாகேஸ்வரி தம்பதியினரின் மருமகனும்,
கோலலேஸ்வரி (கோசலா) அவர்களின் பாசமிகு கணவரும்,
கௌதமியின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம், கனகலிங்கம், இராஜலஷ்மி, யோகலிங்கம், நடேசலிங்கம், கமலவேணி மற்றும் சாந்தபவானி ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
சஞ்சீவன், சுகன்யா ஆகியோரின் மைத்துனரும்,
ஜெயநீதன் அவர்களின் பாசமிகு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 07-07-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் சுன்னாகம் கொத்தியாலடி இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
