Mr. Sinnaiya Kamalanathan

(ஓய்வுபெற்ற பொது சுகாதார வௌிக்கள உத்தியோகத்தர்)

Sinnaiya Kamalanathan

Date of Birth: 13 August 1946 - Deceased: 25 May 2024

யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், உதயநகர் மேற்கு, கிளிநொச்சியை நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னையா கமலநாதன் அவர்கள் 25-05-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், திரு.திருமதி சின்னையா-தங்கலட்சுமி தம்பதியினரின் அன்பு மகனும், 

செல்வகுமாரி அவர்களின் பாசமிகு கணவரும்,

பிரேம்நாத் (தாதிய உத்தியோகத்தர், பொது வைத்தியசாலை-திருகோணமலை), பிரதீப் (உதவிப் பிராந்திய முகாமையாளர், மக்கள் வங்கி - மட்டக்களப்பு) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தர்ஷினி (தாதிய உத்தியோகத்தர், பொது வைத்தியசாலை-திருகோணமலை), ஜெயதர்சினி (பிரதி முகாமையாளர், மக்கள் வங்கி-வவுனியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஹரிஷன், ஜதுஷன், ஷருக்‌ஷன், யுகேஷ், பிருந்தேஷ், யதீஷ் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

பத்மாவதி, காலஞ்சென்றவர்களான விஸ்வநாதன், அஞ்சனா தேவி, சிவலிங்கம், கமலேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு சகோதரனும் ஆவார்.

அன்னாரின் இறுதி வணக்க நிகழ்வுகள் இல-25A, 6ஆம் ஒழுங்கை, வேப்பங்குளம், வவுனியாவில் அவரது இல்லத்தில் புகழுடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 27-05-2024 திங்கட்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, தட்சணாங்குளம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:-  குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 
 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (27/05/2024 04:00)