திருமதி. சின்னையா ராமு செலம்பாய்

சின்னையா ராமு செலம்பாய்

தோற்றம்: 09 செப்டம்பர் 1944 - மறைவு: 07 ஜூலை 2026

இந்தியா - மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா தனிய மங்களம் கிராமத்தைப்   பூர்வீகமாகவும் கந்தகடை மற்றும் நாவலப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. சின்னையா ராமு செலம்பாய் அவர்கள் 07-07-2026 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னையா சேர்வை - ராக்கு தம்பதியினரின் அன்பு புதல்வியும், பம்பையன் தேவர் தம்பதியினரின் மருமகளும்,

காலஞ்சென்ற (நியு தனலட்சுமி ஸ்டோர்ஸ்) வேலுதேவர் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற சாமிநாதன் சேர்வை அவர்களின் அன்பு தமக்கையும்,

சுப்பிரமணியம், பாலகுமார், பத்மாவதி, மங்கையர்க்கரசி, ரவி, மல்லிகா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

இந்திராகாந்தி, லக்ஷ்மி, தியாகநாதன், கலைச்செல்வன், சாந்தினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பிரகாஷ், ஹரிசாந்தான், தர்சன், பிரவீனா, பூர்ணிமா, பிரிதிவிராஜ், ஹிரஞ்சன், கோவிஷ்வ காருண்யா, வித்யாசாகர், ராகவி, தியா, யாழினி, இந்துஜா, அனிதா, இராஜதர்சன், ராஜ், கவின், சம்ருதா, அனோஜ், மகிஷா ஆகியோரின் அன்பு பாட்டியும்,

சுபிக்சா, கிருஷ்ணயா, ருத்வா தஷினா, ஜெகன்யா, தியாக்ஷெரி, ஹர்சிவ் ஆகியோரின் பூட்டியும் ஆவார்.

அன்னாரது இறுதிக்கிரியைகள் 09-07-2026 வியாழக்கிழமை காலை 8.30 மணி முதல் இல- 94/122, மஹாகும்புற, நாவலப்பிட்டியில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, முற்பகல் 10.00 மணியளவில் திருவுடல் பவ்வாகம் பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (09/07/2026 00:00)