திரு. சின்னக்குட்டி (ஆசைப்பிள்ளை) பண்டாரம் இராசதுரை
(முன்னாள் ஊழியர் - லூயிஸ் பிறவுன் மக்வூட்ஸ் கொம்பனி - மவுசாகலை சீர்பாத தோட்டம்)
தோற்றம்: 26 நவம்பர் 1932 - மறைவு: 12 டிசம்பர் 2024
யாழ் உரும்பிராய் மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னக்குட்டி இராசதுரை அவர்கள் 12-12-2024) வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னக்குட்டி பண்டாரம் - சேதுப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும்,
முத்துக்குமார் - நாகம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்றவர்களான ப.தம்பிராசா (லக்கம் எஸ்ரேட், மஸ்கெலியா), சிவபாக்கியம் (பிரபல வர்த்தகர் - குருநாகல்), ப.தம்பித்துரை (பிரபல சுருட்டு தொழிற்சாலை அதிபர்) ஆகியோரின் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான சீ.சரஸ்வதி, ந.பரமேஸ்வரி, மு.ஜெயரத்தினம், மு.சுந்தரலிங்கம், மு.சுந்தரமூர்த்தி, மற்றும் Dr. மு.யோகலிங்கம் (இலண்டன்), து.மகேஸ்வரி (கனடா), மு.சுப்பிரமணியம் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 13-12-2024 வெள்ளிக்கிழமை முற்பகல் 11.30 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் உரும்பிராய் வேம்பன் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
முகவரி:-
சிவகுல வீதி, முத்துக்குமார் லேன்,
உரும்பிராய் மேற்கு, உரும்பிராய்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
