திரு. சின்னப்பு சுப்பிரமணியம் (ஏழாலை மணியம்)
தோற்றம்: 11 ஜனவரி 1940 - மறைவு: 10 டிசம்பர் 2021
யாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும், சிறுப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னப்பு சுப்பிரமணியம் அவர்கள் 10-12-2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னப்பு, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நாகம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
உதயகுமார் (சுவிஸ்), தேவலதா (கனடா), பிரேமலதா (பிரான்ஸ்), உதயராசா (ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான நடராஜா, திருநாவுக்கரசு, விஜயரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கிருஷ்ணலதா, சர்வானந்தம், ஜெகநாதன், தாரணி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நிவேக் (சுவிஸ்), விநேக் (சுவிஸ்), நவகீர்தன் (கனடா), சாஜினி (கனடா), விதுஷிகன் (கனடா), தர்சிகன் (பிரான்ஸ்), பிரியந்தி (பிரான்ஸ்), ரதுசன் (பிரான்ஸ்), ஸ்ரீராம் (ஐக்கிய அமெரிக்கா), ராகவி (ஐக்கிய அமெரிக்கா), பிரணவி (ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 12-12-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் சிறுப்பிட்டி மேற்கு இல்லத்தில் நடைபெற்று பின்னர் சிறுப்பிட்டி மேற்கு பத்தகலட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (11/12/2021 04:02)
