திரு. சின்னத்தம்பி கனகலிங்கம்
தோற்றம்: 04 நவம்பர் 1948 - மறைவு: 04 செப்டம்பர் 2025
யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் பெருமாள் கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னத்தம்பி கனகலிங்கம் அவர்கள் 04-09-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி - பராசக்தி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற பசுபதி - கண்ணம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
சந்திரா அவர்களின் அன்புக் கணவரும்,
கண்ணன் (கனடா), மன்னன், சுரேஷ், காலஞ்சென்ற அனுசியா மற்றும் கிரிசா, தனுசா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கிரிஜா, சர்மிளா, குமுதா, முரளிதரன், கசிபன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஆனந்தன், நளினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
வைத்தீஸ்வரன், காலஞ்சென்ற பேரின்பம், மகேஸ்வரி மற்றும் லோகேஸ்வரி, சுந்தரலிங்கம், ஞானேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
விஸ்ணூதரன், செந்தூரன், பிரதீஸ், விதுசாயினி, லக்சாயினி, கிரிசான், துஷானிகா, சபரிஸ்கா, கவிஸ்னன், வருன், அஹானா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 07-09-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 10:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கட்டையாலடி, கோண்டாவில் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
முகவரி:-
இருபாலை வீதி, பொதிகை வீதி,
பழனியான்டவர் கோவிலடி,
கோண்டாவில், யாழ்ப்பாணம்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
