திரு. சின்னத்தம்பி மகிழ்ராசா
தோற்றம்: 28 பெப்ரவரி 1960 - மறைவு: 04 மே 2026
யாழ். கோப்பாய் மத்தியைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை சினேக் லேனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னத்தம்பி மகிழ்ராசா அவர்கள் 04-05-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி - செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,
புவனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
பிரதீபா, பிரவீனா, அனுஷனா, மதுஷா (லண்டன்) ஆகியோரின் பாசமிகு தகப்பனாரும்,
வசந்தகுமார் (டுபாய்), ஸ்ரீ சங்கர் (Piegeon Island Diving Center) சந்திரகுமார், தங்கலிங்கம் (இலண்டன்) ஆகியோரின் மாமனாரும்,
காலஞ்சென்ற சின்னராசாவின் பாசமிகு மைத்துனரும்,
மகிழினியின் அன்புச் சகோதரரும்,
பிரதிபன், ஜெனோதரன், பிரேமினி ஆகியோரின் பாசமிகு தாய்மாமனும்,
அவினாஷ், அக்ஷயா, பவனிஷ், ஜெயின் அகசி, சாம் சந்திரன், கவியாழ் இன் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 06-05-2026 புதன்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் திருகோணமலை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
