Mr. Sinnathamby Nagarasa

Sinnathamby Nagarasa

Date of Birth: 13 July 1951 - Deceased: 31 August 2026

யாழ். அந்திரானைப் பிறப்பிடமாகவும், கல்வளை சண்டிலிப்பாயை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. சின்னத்தம்பி நாகராசா அவர்கள் 31-08-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களின் சின்னத்தம்பி - மகிழம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,

சந்திரா அவர்களின் அன்புக் கணவரும்,

சுபசிலன், சுபசீலா, குணசீலா, குணசீலன், சத்தியசீலா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பிருந்தாகாந்தி, ரசிகரன், ஜெகதீபன், டினேகா, நிகாஷ் ஆகியோரின் மாமனாரும்,

லகிஷன், கதிஹ்ரா, ஸ்ரீகரிஷ்,  காலஞ்சென்ற கபிஷன், சஷ்மி, நிஷிகா, கபிசானா, டரனிசன், மேகா, ஆதிக் ஆகியோரின் அன்புமிகு போனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 01-09-2026 செவ்வாய்க்கிழமை அன்று முற்பகல் 10.30 மணியளவில் கல்வளை சண்டிலிப்பாயில் நடைபெற்று, திருவுடல் மானிப்பாய் பிப்பிலி மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (31/08/2026 00:00)