திரு. சின்னத்தம்பி சேனாதிராசா
தோற்றம்: 05 செப்டம்பர் 1954 - மறைவு: 16 டிசம்பர் 2025
யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், மாவிட்டபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னத்தம்பி சேனாதிராசா அவர்கள் 16-12-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி - கனகநாயகி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பித்துரை - சரஸ்வதி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
நிர்மலாதேவி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
காலஞ்சென்ற கனரஞ்சினியின் அன்புச் சகோதரனும்,
காலஞ்சென்ற சியாமளா, பிரேமளா, சர்மிலன், சயந்தன் ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,
சிவாகரன், வசந்தநாதன், ரேணுகா ஆகியோரின் மாமனாரும்,
காலஞ்சென்ற சுவர்ணன், துளசி, புவிதாயினி, அபர்ணா, டிசாந்த், விபிஷாந்த் ஆகியோரின் பேரனும்,
சாரதாதேவி, லலிதாதேவி, சிறிபாஸ்கரன், ஜெயபாஸ்கரன், தவபாஸ்கரன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 18-12-2025 வியாழக்கிழமை அன்று முற்பகல் 11:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, நண்பகல் 12:00 மணியளவில் திருவுடல் மாவிட்டபுரம் தச்சங்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
