திருமதி. சின்னத்தம்பி சிவபாக்கியம்
தோற்றம்: 30 டிசம்பர் 1942 - மறைவு: 13 செப்டம்பர் 2025
யாழ். அச்சுவேலி இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி கல்வயலை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சின்னத்தம்பி சிவபாக்கியம் அவர்கள் 13-09-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நமசிவாயம் - பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை - சின்னத்தங்கம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,
சின்னத்தம்பி (ஓய்வு நிலை ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,
ஆனந்தகுமார் (D.O பச்சிலைப்பள்ளி பிரதேச சபை) அவர்களின் அன்புத் தாயாரும்,
தர்ஷினி (ஆசிரியை - யாழ். கைதடி விக்கினேஸ்வரா வித்தியாலயம்) அவர்களின் அன்பு மாமியாரும்,
துஷானந்த், கிஷானி ஆகியோரின் அன்புப் பேர்த்தியும்,
காலஞ்சென்ற வள்ளியம்மாள், சிவலிங்கம் (ஓய்வுநிலை ஆசிரியர்), சிவத்தம்பி, காலஞ்சென்ற சிவலோகநாயகி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்ற தியாகராசா அவர்களின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 14-09-2025 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று,திருவுடல் கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
