திரு. சின்னத்தம்பி துரைராஜா (கோட்டூர்)
தோற்றம்: 12 பெப்ரவரி 1944 - மறைவு: 29 செப்டம்பர் 2022
யாழ். அம்பனை தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி துரைராஜா அவர்கள் 29-09-2022 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி ஆச்சிமுத்து தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
சகுந்தலா அவர்களின் பாசமிகு கணவரும்,
செல்வகுமார் (பிரான்ஸ்), மேகலா (லண்டன்), ரமேஸ்குமார் (பிரான்ஸ்), அஜந்தா (லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பிரபாகரன் (லண்டன்), லோகேஸ் (லண்டன்), வைதேகி (பிரான்ஸ்), ஷாழினி (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
செல்வப்பிரியா, மகிஷா, மிதுஷா, மித்திரா(பிரான்ஸ்) ஆகியோரின் ஆசை அப்பப்பாவும்,
அதீசன், சயுன், நிகிஷா (லண்டன்) ஆகியோரின் செல்லத் தாத்தாவும்,
காலஞ்சென்ற குணரட்ணம், நல்லம்மா, ராசமணி, செல்லமணி, தங்கமணி, மகாலட்சுமி, கதிரமலை, விஜயரட்ணம் (கனடா), மனோன்மணி (இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 03-10-2022 திங்கட்கிழமை அன்று மு.ப. 10:00 மணியளவில் தெல்லிப்பழையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
