Mr. Sinnathurai Balasingam
Date of Birth: 28 November 1955 - Deceased: 28 November 2023
யாழ். புலோலியைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை பாலசிங்கம் அவர்கள் 28-11-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை நாகமுத்து தம்பதிகளின் பாசமிகு புத்திரனும், காலஞ்சென்ற வீரகத்திப்பிள்ளை லக்ஷிமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜமுனாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
நித்தியா (கனடா), அர்ச்சனா (கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பாரதிகுமார், அகிலராஜ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஆருஷன், ஆராதனா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்றவர்களான செல்வரட்ணம், விநாயகமூர்த்தி, மலர்வதனி மற்றும் கனகசிங்கம், தர்மகுலசிங்கம், குலவீரசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற மகேஷ்வரி மற்றும் சபாநாதன், லோகநாதன், ஈஸ்வரி, உமா, மதிவதனி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் மலர் அகம் - புலோலி தெற்கு, புலோலி இல் உள்ள அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு 03-12-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறுதிக்கிரியை நடைபெற்று அதனைத்தொடர்ந்து ஆனைவிழுந்தான் மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
