திரு. சின்னத்துரை நிர்மலேந்திரன்
(உத்தரவு பெற்ற நில அளவையாளர் (Licensed Surveyor)-உரும்பிராய்)
தோற்றம்: 18 ஜூலை 1948 - மறைவு: 06 ஆகஸ்ட் 2024
யாழ். உரும்பிராய் தெற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பையும், உரும்பிராய் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னத்துரை நிர்மலேந்திரன் அவர்கள் 06-08-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை-சிவபாக்கியம் தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான இராமலிங்கம்-சௌந்தரம் தம்பதியினரின் மருமகனும்,
சுசிலாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,
தீபன் (Stuctura Engineer-சிங்கப்பூர்), நிரோஷன் (Quantity Surveyor-நியூசிலாந்து), சரண்யா (Assustant Accountant-அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஹம்சினி (சிங்கப்பூர்), திவ்யா (நியூசிலாந்து), ஹிமிலன் (Engineer-அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பிரகதி, தர்மிக், கஜலக்ஷன், கபிக்ஷன், விகாஷன் ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும், லவீணா, அக்சயன் ஆகியோரின் பாசமிகு அம்மப்பாவும்,
காலஞ்சென்றவர்களான ஜெயேந்திரன், சிரோன்மணி மற்றும் தனேந்திரன், றஜனி ஆகியோரின் சகோதரனும்,
மகேந்திரன், கமலாம்பிகை, பாலாம்பிகை, லலிதாம்பிகை காலஞ்சென்ற விமலாம்பிகை ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் புகழுடல் அஞ்சலிக்காக 07-08-2024 புதன்கிழமை அன்று முற்பகல் 10.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் வைக்கப்பட்டு, 08-08-2024 வியாழக்கிழமை காலை 7.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, தகனக்கிரியைக்காக கல்கிசை பொது மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.
Wellawatte.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
