திரு. சின்னத்துரை இரகுநாதன்
(ஓய்வுபெற்ற ஆசிரியர்- யாழ். சங்கானை சிவப்பிரகாச மகா வித்தியாலயம்)
தோற்றம்: 01 டிசம்பர் 1933 - மறைவு: 28 நவம்பர் 2021
யாழ். வடலியடைப்பு பிள்ளையார் கோவில் வீதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்துரை இரகுநாதன் அவர்கள் 28-11-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை (ஓய்வுபெற்ற அதிபர்), அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற சுவர்ணகுமாரி (ஓய்வுபெற்ற ஆசிரியர்- யாழ். பண்டத்தரிப்பு இந்துக் கல்லூரி) அவர்களின் அன்புக் கணவரும்,
குகப்பிரியை (ரதி), குகதர்சினி, குகவதனி (People’s Bank) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பாலசுப்பிரமணியம், உதயகுமார், பிரபாகரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நாரணி, கிரிஷான், மிருணன், பிரவீனன், ஜஷானி, வருணி, அருட்சயன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
புவனேஸ்வரி (ஓய்வுபெற்ற ஆசிரியர்), மகேஸ்வரி, காலஞ்சென்ற குலேந்திரசிங்கம் (ஓய்வுபெற்ற ஆசிரியர்) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 29-11-2021 திங்கட்கிழமை அன்று மகிந்த மலர்ச்சாலையில் பார்வைக்காக வைக்கப்பட்டு பின்னர் பி.ப 02:30 மணியளவில் கல்கிசை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
