திரு. சின்னத்துரை சசிகரன்
தோற்றம்: 05 பெப்ரவரி 1973 - மறைவு: 09 செப்டம்பர் 2026
யாழ். பத்தமேனி அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் - Bondy யை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. சின்னத்துரை சசிகரன் அவர்கள் 09-09-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை - கமலாதேவி தம்பதியினரின் பாசமிகு மூத்த மகனும், மட்டுவிலைச் சேர்ந்த முத்துவேல் - யோகேஸ்வரி தம்பதியினரின் மூத்த மருமகனும்,
கலைவாணி அவர்களின் அன்புக் கணவரும்,
கவிதன், கவிநயா, சயந்தவி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுதாகரன், ஜெயபாகரன் (பிரான்ஸ்), கிருபாகரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
உமா, காலஞ்சென்ற செந்தூரன், நந்தகுமார், கௌரி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 12-09-2026 சனிக்கிழமை, 13-09-2026 ஞாயிற்றுக்கிழமை மற்றும் 15-09-2026 செவ்வாய்க்கிழமை ஆகிய தினங்களில் பிற்பகல் 3:00 - 4:00 மணி வரை Crématorium des joncherolles villetaneuse (95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 17-09-2026 வியாழக்கிழமை காலை 9:00 - 11:00 மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11:30 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
