திரு. சின்னத்துரை தெட்சணாமூர்த்தி

(ஓய்வுபெற்ற தலைமை பொறியியலாளர்)

சின்னத்துரை தெட்சணாமூர்த்தி

தோற்றம்: 03 ஜூலை 1942 - மறைவு: 04 ஆகஸ்ட் 2025

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் மகாலக்ஷ்மி இல்லம் 36வது லேன், வெள்ளவத்தை கொழும்பு, Pinner - இலண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னத்துரை தெட்சணாமூர்த்தி அவர்கள் 04-08-2025 திங்கட் கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை - மகாலக்ஷ்மி தம்பதியினரின் ஏக புதல்வனும்,

காலஞ்சென்றவர்களான செல்லையா - அன்னபூரணம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,

தவயோகராணி அவர்களின் அன்புக் கணவரும்,

திபாகரன், Dr. பிரியாளினி, யதிஷ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

றேனுகா, தயாஸ்காரன், சோனல் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

திரன், தைரன், றயன், ஹர்ஷிகா, ஹனிஷ் ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற பரமேஸ்வரி, இராஜரட்ணம் (கனடா), காலஞ்சென்ற சுந்தரலிங்கம், ஈஸ்வரலிங்கம் (அவுஸ்திரேலியா), சண்முகநாதன் (இலங்கை), நாகேஸ்வரி (ஜேர்மனி), காலஞ்சென்ற யோகநாதன், பாலகிருஷ்ணன் (ஜேர்மனி), பத்மலோசனி (அவுஸ்திரேலியா), ஜேகதீசன் (கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (10/08/2025 04:00)