திரு. சின்னையா சிவகுருநாதன்

சின்னையா சிவகுருநாதன்

தோற்றம்: 09 ஜனவரி 1934 - மறைவு: 12 ஏப்ரல் 2023

யாழ். நீர்வேலி வடக்கு இராஜ வீதியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சின்னையா சிவகுருநாதன் அவர்கள் 12-04-2023 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா நாகம்மா தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரனும்,

காலஞ்சென்றவர்களான சபாரத்தினம் நல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற இலட்சுமி அவர்களின் அருமைக் கணவரும்,

தயாறஞ்சினி (சுகாதார முகாமைத்துவ உதவியாளர், போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம்), சிவகுமாரன் (ஜேர்மனி), காலஞ்சென்ற சிவரூபன், பத்மறஞ்சினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

விக்கினேஸ்வரி (ஜேர்மனி), நந்தராஜன் (அலுவலகப் பணியாளர், மாவட்ட செயலகம், யாழ்ப்பாணம்) ஆகியோரின் அருமை மாமனாரும்,

பவிதா, சஜிதா, அகிசன் ஆகியோரின் செல்லப் பேரனும்,

விஜயலட்சுமி, சுந்தரலிங்கம், பூபதி, சிவபாக்கியம், செல்வரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பாலசிங்கம், பரிமளகமலேஸ்வரி, சுப்பிரமணியம், பத்மநாதன், ஜெகதீஸ்வரி, பூபதியம்மா, காலஞ்சென்றவர்களான கந்தசாமி, தவராசா மற்றும் விஜயரட்ணம், புஸ்பராணி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 16-04-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் சீயாக்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:-

இராஜ வீதி,
நீர்வேலி வடக்கு,
நீர்வேலி.
 
தகவல்:-  குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (15/04/2023 05:26)