திரு பிரம்மஸ்ரீ சிதம்பரநாத ஐயர் அரிகர சர்மா

(இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன தமிழ் சேவையின் இயல் நாடக கட்டுப்பாட்டாளராக 30 வருடங்கள் சேவையாற்றி இளைப்பாறியவரும் கனடா BC, றிச்மண்ட் ஸ்ரீ முருகன் ஆலய முன்னாள் பிரதம குரு)

பிரம்மஸ்ரீ சிதம்பரநாத ஐயர் அரிகர சர்மா

மறைவு: 07 அக்டோபர் 2022

கௌண்டின்ய கோத்திரத்தை சேர்ந்த யாழ்/ சுன்னாகம் மயிலணியை  பிறப்பிடமாகவும் கனடா வன்கூவரை  வசிப்பிடமாகவும் கொண்ட இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன தமிழ் சேவையின் இயல் நாடக கட்டுப்பாட்டாளராக 30 வருடங்கள் சேவையாற்றி இளைப்பாறியவரும் கனடா BC, றிச்மண்ட் ஸ்ரீ முருகன் ஆலய முன்னாள் பிரதம குருவுமாகிய  பிரம்மஸ்ரீ அரிகர சர்மா அவர்கள் 7.10.2022  வெள்ளிக்கிழமை காலை சிவபதம் அடைந்துள்ளார். 

இவர் காலம் சென்ற சிதம்பரநாத ஐயர், நகுலாம்பிகை அவர்களின் அன்பு மகனும்,

காலம் சென்ற கிருஷ்ண ஐயர், மீனாட்சி அம்மாளின் மருமகனும்,

கமலாதேவியின் அன்புக்கணவரும்,

சசிகலா, திலீபன், ரம்யாவின் பாசமிகு தந்தையும்,

காலம் சென்ற கார்த்திகாயினி, காலம் சென்ற சங்கர நாராயண ஐயர், காலம் சென்ற வெங்கடேச சர்மா, சதாசிவ சர்மா, தியாகராஜ குருக்களின் சகோதரனும், 

காலம் சென்ற சங்கரையர், ஸ்ரீகாந்தா  அவர்களின் மைத்துனரும், 

சுதர்சனன், தயான் பிரதாப், அனுஷியாவின் மாமனாரும்,

மதுரா, மயன், ப்ரத்யுன், அனந்திகா, மகிழ்நனின் பாசமிகு பேரனும் ஆவார். 

அன்னாரின் ஆத்மா சாந்தி கிரியைகள்  15.10.2022 சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு Riverside Funeral Home & Crematorium, Delta, BC  இல் நடைபெறும் என்பதை உற்றார் உறவினர் நண்பர்களுக்கு அறியத்தருகிறோம்.
 
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்தனை செய்வதோடு யாழ் சர்வதேச இந்துமத குருமார் ஒன்றியத்தின் ஆழ்ந்த அனுதாபங்கள் ‌தெரிவிக்கின்றோம்


www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (12/10/2022 02:50)