Mr. Siva Sellathurai
Date of Birth: 03 November 1936 - Deceased: 04 April 2024
யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிவா செல்லத்துரை அவர்கள் 04-04-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. சி .செல்லத்துரை - திருமதி. நாகரத்தினம் அவர்களின் அன்பு புதல்வரும், திரு. நடராஜா - திருமதி. யோகநாயகி (அச்சுவேலி) தம்பதியினரின் அன்பு மருமகனும்,
திருமதி. சி. ஜெயரஞ்ஜினி அவர்களின் அன்புக்கணவரும்,
திரு. சிவாசுதன், திருமதி. சிவதாரிணி ஆகியோரின் அன்பு தந்தையும்,
திருமதி. சி. ஜீன், திரு. கே. அசான்தீபன் ஆகியேராின் அன்பு மாமனாரும்,
பிரவின், மினோலி, மேஹா, சசீன்ஷே், அக்ஷிதா ஆகியோரின் பாட்டானாரும்,
திரு. சிவபாதசுந்தரம் (சிட்னி), திரு. சிவகுமார் (மெல்பன்) ஆகியோரின் அன்பு சகோதரரும்,
ஜெகஸ்கந்தா (மெல்பன்), காலஞ்சென்ற திரு. சிவஸ்கந்தா (சிட்னி), திரு. தனஸ்கந்தா (மெல்பன்), காலஞ்சென்ற திருமதி. யோகரன்ஜினி ராஜ்குமார் (சிட்னி), திரு. சுரேஸ்கந்தா (பிரித்தானியா) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் இல- 10, றோகினி வீதி, கொழும்பு-06 இல் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டு, 07-04-2024 காலை 9.00 மணியளவில் ஈமக்கிரியைகள் நடைபெற்று, பின்னர் பொரளை கனத்தை இந்து மயானத்தில் பிற்பகல் 2.30 மணியளவில் தகனம் செய்யப்படும்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
www.tamilthakaval.org
