திரு. சிவலிங்கம்பிள்ளை பெரியசாமி (ரவி)
தோற்றம்: 14 ஜூன் 1969 - மறைவு: 04 ஜூன் 2026
இந்தியா - திருச்சி மாவட்டம் தெற்கு சிறுப்பத்தூர் கிராமம் குருவளுடையான் கோத்திரத்தைச் சேர்ந்த பண்டாரவளையை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திரு. சிவலிங்கம்பிள்ளை பெரியசாமி அவர்கள் 04-06-2026 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவலிங்கம்பிள்ளை - மாரியாய் தம்பதியினரின் மகனும், காலஞ்சென்ற லோகநாதன் - காமாட்சி தம்பதியினரின் மருமகனும்,
மோகனப்பிரியா அவர்களின் அன்பு கணவரும்,
ஹரிதர்ஷினி, ஷதுர்ணியா, அக்ஷயா ஆகியோரின் பாசமிகு தந்தையாரும்,
சரோஜா, பாலயோகினி (ராஜி), கலைச்செல்வி, ஆனந்தஜோதி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
தினேஷ், மதன்குமார் ஆகியோரின் மாப்பிள்ளையும்,
பெரியசாமி (மாத்தளை), ராஜேந்திரன் (கொழும்பு), சதாசிவம் (பண்டாரவளை அபேரத்ன ஹாட்வெயார்), பெரியசாமி (இராகலை) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 05-06-2026 வெள்ளிக்கிழமை முதல் இல- 43, அம்பதென்ன, பண்டாரவளையில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 06-06-2026 சனிக்கிழமை அன்று மதியம் 2.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 4.00 மணியளவில் பண்டாரவளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
கஜன்:- +94 72 900 1400
துஷிந்தன்:- +94 77 724 0623
www.tamilthakaval.org
