Mrs. Sivalingham Nageswary

Sivalingham Nageswary

Date of Birth: 14 September 1940 - Deceased: 04 March 2025

யாழ். வேலணை வடக்கு மணியகாரர் வீட்டடியைப் பிறப்பிடமாகவும், இல-49, பிரப்பங்குளம் வீதி (பன்றிக் கோட்டு பிள்ளையார் கோவிலடியை) வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சிவலிங்கம் நாகேஸ்வரி அவர்கள் 04-03-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் - பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மகளும், கட்டுவானைச் சேர்ந்த இளையதம்பி - செல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சிவலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

ஐங்கரன், சுதாகரன், சுதர்சினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கிருபாநந்தினி அவர்களின் அன்பு மாமியாரும்,

கியானிக்காவின் பாசமிகு பேத்தியும்,

காலஞ்சென்றவர்களான யோகம்மா (ஓய்வு நிலை ஆசிரியை), செல்லம்மா மற்றும் மனோன்மணி, அருமைநாயகம் (ஓய்வு பெற்ற கோட்டக் கல்விப் பணிப்பாளர்), புவனேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான குமாரரத்தினம் (ஓய்வு நிலை ஆசிரியர்), கதிரவேல் மற்றும் குமாரவேல், ரேவதி, மகேந்திரராசா, தவமணி, திரவியம், காலஞ்சென்ற அற்புதம், சிவராசா ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 06-03-2025 வியாழக்கிழமை அன்று அன்னாரது தற்காலிக இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் சாட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

 அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (05/03/2025 05:00)