Mr. Sivalingham Sivatharan
(சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர், சங்கானைப் பிரதேச செயலகம்)
Deceased: 23 November 2025
யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு.சிவலிங்கம் சிவதரன் அவர்கள் 23-11-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவலிங்கம் - லோகாம்பிகை தம்பதியினரின் மூத்த புதல்வனும், காலஞ்சென்ற இராமநாதி - தவமணி தம்பதியினரின் மருமகனும்,
தவச்செல்வி அவர்களின் அன்புக் கணவரும்,
லக்ஷிக்கா, தர்சிக்கா, தரணிக்கா, யனகன், சன்விகா (யா/யாழ்ப்பாணக் கல்லூரி மாணவர்கள்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கேதீஸ்வரனின் (சேய்) அன்புச் சகோதரனும்,
ஹரிசனின் (யா/யாழ்ப்பாணக் கல்லூரி மாணவன்) பெரிய தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 27-11-2025 வியாழக்கிழமை வட்டுக்கோட்டையில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் காலை 07:00 மணியளவில் நடைபெற்று, திருவுடல் வழுக்கையாறு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
