Mrs. Sivamani Balasingam
Deceased: 05 January 2024
யாழ். அளவெட்டியை பிறப்பிடமாகவும், கொழும்பு தெஹிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சிவமணி பாலசிங்கம் அவர்கள் 05-01-2024 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நவரட்ணம் - பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான செல்லப்பா - கனகம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பாலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
கஜேந்திரா (கனடா), திவாகரன் (கனடா), மஞ்சுளா (ஆசிரியை சைவமங்கையல் வித்தியாலயம்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சிவஞானதேவி (கனடா), யோகவதனி (கனடா), ஜெகப்பிரியன் (கணக்காளர்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பிறிசித்தா ரொடொல்போ (Rodolfo), யாழினி, லகரன் ஆகியோரின் அன்பு பேத்தியும்,
ரெனே (Rene) வின் அன்புப் பூட்டியும்,
காலஞ்சென்றவர்களான குணலட்சுமி, சிவநேசன், சிவபாக்கியம், சிவமலர் மற்றும் சிவபாதம், சிவபாலன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பரராஜசிங்கம் (கனடா) அவர்களின் அன்பு மைத்துனியும்,
அன்னாரின் பூதவுடல் மகிந்த மலர்ச்சாலையில் 09-01-2024 செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணி தொடக்கம் பிற்பகல் 4.00 மணி வரை அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 10-01-2024 புதன்கிழமை காலை 8.00 மணிக்கு ஈமக்கிரியைகள் ஆரம்பிக்கப்பட்டு முற்பகல் 10.00 மணிக்கு கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
