திருமதி. சிவபாக்கியம் மாணிக்கவாசகர்

(ஓய்வு நிலை அதிபர்)

சிவபாக்கியம் மாணிக்கவாசகர்

மறைவு: 14 செப்டம்பர் 2023

எங்கள் தாயார் ஓய்வு பெற்ற அதிபர் திருமதி. சிவபாக்கியம் மாணிக்கவாசகர் அவர்கள் இறைவனடி சேர்த்து விட்டார் என்பதனை துயரோடு அறியத் தருகின்றோம்.

யாழ் வேலணை கிழக்கு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழுப்பினை வதிவிடமாகவும் கொண்ட  ஓய்வு நிலை அதிபர் திருமதி. சிவபாக்கியம் மாணிக்கவாசகர் அவர்கள் (சின்னக்கிளி ரீச்சர்) இறைவனடி சேர்ந்து விட்டார் என்பதனை துயரோடு அறியத் தருகின்றோம்.
 
இவர் மாணிக்கவாசகர் (ஓய்வு நிலை ஆசிரியர்) அவர்களின் மனைவியும்,
 
இளந்திரையன் (Doctor-Norway), இளஞ்செழியன் (உயர் நீதிமன்ற நீதிபதி-வவுனியா),
சிவகெளரி (ஆசிரியர்-CANADA), இளம்பிறையன் (விரிவுரையாளர்-யாழ்.பல்கலைக் கழகம்) இளங்குமரன் (இளங்கோ-வானொலிக் கலைஞர்-TIME FM RADIO,CANADA) ஆகியோரின் அன்புத் தாயாருமாவார்.
 
இவரின் பூதவுடல் வெள்ளி, சனி ஆகிய தினங்கள் கொழும்பு ஜெயரட்ண மலர்ச் சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் யாழ்ப்பாணம் எடுத்துவரப்பட்டு, கேணியடி கொக்குவில் மேற்கில்  உள்ள அவருடைய மகன் இளம்பிறையன் இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை அஞ்சலிக்காக வைக்கப்பட்டு  திங்கள் காலை 8 மணிக்கு இறுதிக்கிரியைகள் ஆரம்பிக்கப்பட்டு பகல் 11 மணியளவில் வேலணையில் உள்ள அவரின்  இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பிற்பகல் 2 மணிக்கு தகனக்கிரியைக்காக வேலணை சாட்டி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
 
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்.

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (14/09/2023 19:32)