திருமதி. சிவபுஸ்பா சுந்தர்ராஜன் (புஸ்பா)
தோற்றம்: 04 ஆகஸ்ட் 1965 - மறைவு: 22 அக்டோபர் 2024
யாழ். சுழிபுரம் பறாளாய் வீதியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சிவபுஸ்பா சுந்தர்ராஜன் அவர்கள் 22-10 2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சிவலிங்கம் அவர்களின் சிரேஷ்ட புத்திரியும்,
காலஞ்சென்ற சுந்தர்ராஜன் அவர்களின் பாசமிகு மனைவியும்,
சறோன், சந்தோசி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சிவதுரை (கண்ணன்-ஜேர்மனி), சிவகங்கா (ஆசிரியை-கொழும்பு), சிவமணி (ஜேர்மனி), யமுனா (நோர்வே) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
விவேகானந்தன் (ஆனந்தன்), சிவானந்தன், பரமானந்தன் (பரமு) ஆகியோரின் அன்பு மருமகளும்,
மகேஸ்வரி, நகேஸ்வரி, பரமேஸ்வரி ஆகியோரின் அன்பு பெறாமகளும்,
இராமசாமி, தர்மலிங்கம் (சோதிடர்), சிவராசரத்தினம், வினோதினி ஆகியோரின் அன்பு பெறாமகளும்,
உதயமலர் (பிரதேச செயலகம்-சங்கானை), நவநீதன் (கொழும்பு), கோபிராஜ் (ஓமான்) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
