திருமதி சிவராணி நல்லநாதன்
தோற்றம்: 05 செப்டம்பர் 1956 - மறைவு: 04 செப்டம்பர் 2025
வவுனியா வைரவபுளியங்குளத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமத. சிவராணி நல்லநாதன் அவர்கள் 04-09-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை - கண்மணி தம்பதியினரின் கனிஷ்ட புத்திரியும்,
காலஞ்சென்றவர்களான நல்லையா - இரத்தினாம்பிகை தம்பதியினரின் அன்பு மருமகளும்,
நல்லநாதன் (உரிமையாளர் பிள்ளையார் மெட்டல், லக்ஷ்மி கேட்டரிங் சேர்விஸ் வவுனியா) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான சிவகாமி, சிவகுரு, சிவபாலன், சிவநாயகி, சிவானந்தன் மற்றும் சிவசோதி (வவுனியா), சிவயோகம் (வவுனியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மயூரன் (முகாமையாளர் - LOLC நெல்லியடி கிளை), தீபன் (இலண்டன்), பைரவி (அபிவிருத்தி உத்தியோகத்தர் - இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலயம்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பவித்ரா (யாழ்ப்பாணம்), அனுஜா (இலண்டன்), கிருஷாந்தன் (மக்கள் வங்கி வன்னி பிராந்திய அறவிடல் அதிகாரி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பிரபாகரன், அபர்ணன், வெண்பா, சூரியா, ஆரவி, விஷாகன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 07-09-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இல- 64 வைரவர் கோயில் வீதியில் உள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, முற்பகல் 10:00 மணியளவில் திருவுடல் பூந்தோட்டம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
