திருமதி. சிவரூபராணி நந்தகுமார் (ரூபா நந்து)
மறைவு: 24 ஜூலை 2026
யாழ். நெடியகாடு வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், Kipling - Toronto கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. சிவரூபராணி நந்தகுமார் அவர்கள் 24-07-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஈஸ்வரலிங்கம் (குட்டிமான்) - மகாலக்ஷ்மி (கிளியா) தம்பதியினரின் ஆருயிர் மகளும், திரு. திருமதி அருளம்பலம் பூலோகராசலிங்கம் தம்பதியினரின் மருமகளும்,
நந்தகுமார் (Ken) அவர்களின் ஆருயிர் மனைவியும்,
கிபிகா, தரு ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கார்த்திக்கின் ஆருயிர் அக்காவும்,
நிவேதிகா, மகாலஷ்மி (மாலி), ஜெயலக்ஷ்மி (ஜெயம்) ஆகியோரின் மைத்துனியும்,
கிருஸ்ணகுமார் (குமார்), கிருஸ்ணமூர்த்தி (மூர்த்தி), ராசகுமார் (பவுண்) ஆகியோரின் மைத்துனியும்,
பிரேம்பாபு, விக்கினராஜா, றுக்மணி, றஞ்சினி, ஸ்ரீதருமினி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,
திவிஷா, மீனுஷாவின் பாசமிகு அருமை மாமியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 02-08-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 10:00 - 1:45 மணி வரை St. John’s Dixie Cemetery & Crematorium (737 Dundas Street E Mississauga ON L4Y 285) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, மதியம் 1:45 - 2:50 திருவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
