Mr. Sivasithamparam Krishnananthan
(முன்னாள் பணிப்பாளர் - முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சித் திணைக்களம் - வடக்கு கிழக்கு மாகாணசபை)
Date of Birth: 22 September 1946 - Deceased: 13 January 2025
யாழ். ஏழாலை மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிவசிதம்பரம் கிருஷ்ணானந்தன் அவர்கள் 13-01-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவசிதம்பரம் - இரத்தினம் தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் - தங்கம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,
சந்திரவதனி அவர்களின் அன்புக் கணவரும்,
பிரசன்னா (கட்டடங்கள் திணைக்களம் - வடமாகாணம்), பிரவீனா (வலயக்கல்வி திணைக்களம் - வவுனியா தெற்கு), கபில்தேவ் (திருகோணமலை வளாகம் கிழக்கு பல்கலைக்கழகம்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பவதாரணி (ஆயுள்வேத வைத்தியர்), கருணாநிதி (சிறுவர் நன்னடத்தை திணைக்களம் - வவுனியா), பிரமோதனி (ஆசிரியர், திஸ்ஸ மகாவித்தியாலயம் - திருகோணமலை) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
பிரீத்திகை, ஹர்ஷா, கனுஷ், கிஷோபி, வெஜான் கௌஷால், ஜெனுல் கேய்ஜான் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
பத்மாசனி, லட்சுமிகாந்தன் காலஞ்சென்றவர்களான புஷ்பராணி, இந்திராணி, உமாகாந்தன், சத்தியபாமா மற்றும் மாலினி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 15-01-2025 புதன்கிழமை அன்று முற்பகல் 11.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் ஏழாலை உசத்தியோடை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
