திருமதி சிவசிதம்பரம் தெய்வநாயகி
மறைவு: 20 ஆகஸ்ட் 2025
யாழ். சுழிபுரம் மேற்கினைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சிவசிதம்பரம் தெய்வநாயகி அவர்கள் 20-08-2025 புதன்கிழமை அன்னாரது இல்லத்தில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நடேசு - வள்ளியம்மை தம்பதியினரின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்றவர்களான கிருஷ்ணர் - வள்ளியம்மை தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிவசிதம்பரம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
சிறாணி, சிவரங்கன், சங்கீதா காலஞ்சென்றவர்களான சிவசீலன், சிவானி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பிரவீன் சுபராஜ், கிருஷ்ணாகரன், இங்கிதா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
உமேஷ்பிரசாந்த், டினுவர்ணிகா, எழில் நிலா, தர்சீகா, நிலாவிழி, சாருகாஷ், சௌமியா, சேயோன் ஆகியோரின் அருமைப் பேர்த்தியும்,
சந்தனா அவர்களின் பாசமிகு பூட்டியும்,
காலஞ்சென்றவர்களானகுருபரன், பரமேஸ்வரன், அன்னபூரணம், சிவசண்முகமூர்த்தி,
மால்மருகமூர்த்தி ஆகியோரின் சகோதரியும்,
பரமேஸ்வரி, மகேஸ்வரி, சிவபிரகாசம், குகனேஸ்வரி மற்றும் காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம், ஞானேஸ்வரி, இரத்தினேஸ்வரி, பரமேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 21-08-2025 வியாழக்கிழமை நண்பகல் 12:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் திருவடிநிலை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
