திருமதி. சிவசோதி தையல்நாயகி
தோற்றம்: 20 டிசம்பர் 1948 - மறைவு: 13 செப்டம்பர் 2025
யாழ். சாவகச்சேரி பெருங்குளம் சந்தியை பிறப்பிடமாகவும், மீசாலை மேற்கு, மீசாலையை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. சிவசோதி தையல்நாயகி அவர்கள் 13-09-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சதாசிவம் - பிள்ளையம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான நடராசா - விஜயலட்சுமி தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிவசோதி அவர்களின் அன்பு மனைவியும்,
சுதர்சினி (சுவிஸ்), சிவதர்சினி (மீசாலை), சிவசங்கர் (சுவிஸ்), சுபாஜினி (மீசாலை), சிவவதனி (மீசாலை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
விக்கினேஸ்வரன் (சுவிஸ்), யதுஸ்ஸா (சுவிஸ்), சதீஸ்வரன் (மீசாலை), யோகேந்திரன் (மீசாலை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
டனுக்ஸன் (சுவிஸ்), மதிவதனி, மதுஷன். காவியா, கபிஷேக், அக்ஷிதா, ஷயா (சுவிஸ்), ஆதிஸ் (சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பேர்த்தியும்,
வாசுகி, கபிலன், சயந்தன், ஆகியோரின் பெரியம்மாவும்,
காலஞ்சென்றவர்களான அருந்தவநாயகி, இந்திராணி ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 14-09-2025 ஞாயிற்றுக்கிழமை அன்னாரது இல்லத்தில் நடைபெற்று. நண்பகல் 12:00 மணியளவில் திருவுடல் சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
முகவரி:-
பொன்னார் ஒழுங்கை,
மீசாலை மேற்கு,
மீசாலை.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
