திரு. சிவசுப்பிரமணியம் ஜோய் கிருபாகரன்
தோற்றம்: 23 நவம்பர் 1962 - மறைவு: 03 ஜனவரி 2025
யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், சுன்னாகத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிவசுப்பிரமணியம் ஜோய் கிருபாகரன் 03-01-2025 வெள்ளிக்கிழமை விண்ணுலகம் சென்றார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தர் சிவசுப்பிரமணியம் - கிருபாமலர் தம்பதியினரின் அன்பு மகனும்,
பாவிலு கிறிஸ்தோ-பாக்கியம் தம்பதியினரின் மருமகனும்,
நேவிஸ் எமிலி (பவளம்) அவர்களின் அன்புக் கணவரும்,
கொட்பிறி பிரசன்னா (பிரான்ஸ்), கொட்பிறி மேசியா ஆகியோரின் அன்புத்தந்தையும்,
டெஸ்மன் லோறன்ஸ்சின் (LOLC) அன்பு மாமனாரும்,
வோஸ்மிகா, அல்டோன்சா ஆகியோரின் பேரனும்,
காலஞ்சென்றவர்களான மாசிலாமணி (கிராமசேவகர்), செபமாலையம்மா, மோட்சலங்காரம் மற்றும் மரியதாஸ், நட்சேத்திரம் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்கத் திருப்பலி 04-01-2025 சனிக்கிழமை மதியம் 01.00 மணியளவில் சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலயத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டு, ஆலய சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்.
முகவரி:-
Dr. சுப்பிரமணியம் வீதி,
சுன்னாகம்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
