திரு. சிவசுப்பிரமணியம் சிறீஸ்காந்தன்

(ஓய்வுபெற்ற நிர்வாக உத்தியோகத்தர் மற்றும் விசாரணை உத்தியோகத்தர் (கி.மா))

சிவசுப்பிரமணியம் சிறீஸ்காந்தன்

தோற்றம்: 26 அக்டோபர் 1949 - மறைவு: 15 அக்டோபர் 2025

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், இல-72, பயனியர் வீதி, மட்டக்களப்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிவசுப்பிரமணியம் சிறீஸ்காந்தன் அவர்கள் 15-10-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம் - பரமேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான முருகேசு - பூமணி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

வள்ளியம்மை (ஓய்வுபெற்ற முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்) அவர்களின் அன்புக் கணவரும்,

தர்ஷிகா (முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் - நீர்ப்பாசன திணைக்களம், கல்லடி - மட்டக்களப்பு) அவர்களின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற சரவணபவான் (கல்விப்பணிப்பாளர்), தேவராணி (ஓய்வுபெற்ற ஆசிரியை), சச்சிதானந்தன் (ஓய்வுபெற்ற தொழில்நுட்ப நிர்வாக உத்தியோகத்தர்), சற்குருநாதன் (ஓய்வுபெற்ற ETI அதிபர்), உமாராணி, சடாட்சரண் (பொறியியலாளர் - அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மல்லிகாதேவி, ராஜேஸ்வரி, செந்தமிழ்வேதி, கந்தலிங்கம், சுந்தரலிங்கம், காலஞ்சென்ற குணலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும், 

சௌந்தரலெட்சுமி, சந்தண, ரமணி (ஓய்வுபெற்ற ஆசிரியை), ஜெயதேவி, யோகராஜா, வஞ்சி (பொறியியலாளர் - அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

வித்தியாயினியின் சித்தப்பாவும்,

பிரியதர்ஷனின் மாமாவும்,

டிசாந் தேவர்ஷன், கலாத்மிகாஞ்சலி, டிணுகைலி, தேவசலோமி ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 17-10-2025 வௌ்ளிக்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, மாலை 4.30 மணியளவில் திருவுடல் கள்ளியங்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (17/10/2025 00:00)